4 2 scaled
உலகம்செய்திகள்

செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

Share

செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

சென்னையில் 14 வயது சிறுவன் ஒருவன், செல்போன் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வசித்து வரும் தம்பதி சீனிவாச கிருஷ்ணகுமார் – சைனஜா. இவர்களது மகள் வைஷ்ணவி (20), மகன் ஸ்ரீராம் (14).

8ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீராம், சமீப காலமாக படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போன் கேமில் மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தாய் சைனஜா அவரை கண்டித்துள்ளார். அதனைப் பொருட்படுத்தாமல் நேற்று இரவும் சிறுவன் கேம் விளையாடியுள்ளார்.

மீண்டும் சைனஜா மகனை கண்டித்துவிட்டு தூங்க சென்றுள்ளார். இதன் காரணமாக மன விரக்தியடைந்த ஸ்ரீராம், வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...