tamilnaadi 67 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம்

Share

இலங்கையில் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விகிதாசார முறைமையை மாற்றி தொகுதிவாரி அடிப்படையில் தேர்தலை நடாத்துவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களில் 160 உறுப்பினர்கள் நேரடி தொகுதிவாரி முறையில் தெரிவு செய்யப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளது.

ஏனைய 65 உறுப்பினர்கள் விகிதாசார, மாவட்ட அல்லது தேசிய ரீதியில் தெரிவு செய்யும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில காலங்களுக்கு முன்னதாக கட்சித் தலைவர்களிடம் தேர்தல் முறை குறித்து கருத்து கோரப்பட்டதாகவும், அமைச்சரவை உப குழுவொன்றும் இந்த முறையை பரிந்துரை செய்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய தேர்தல் முறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் இதனால் இந்த முறையை மாற்றியமைக்க வேண்டுமெனவும் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...