15 1 scaled
இலங்கைசெய்திகள்

3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி : ஒருவருடன் கைது

Share

3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி : ஒருவருடன் கைது

திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் இருந்து சுமார் 3 மாதங்களாக காணாமல் போயிருந்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலபிட்டிய கொங்கடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரது தாயார் 3 மாதங்களுக்கு முன்னர் படல்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன சிறுமியை பொலிஸார் பலமுறை தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர், சிறுமியைக் கண்டுபிடிக்கும் நோக்கில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பல குழுக்கள் களமிறக்கப்பட்டன.

குறித்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியிருப்பதாக பொலிஸ் குழுவிற்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதற்கமைய, அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழு, சிறுமியையும், சிறுமியுடன் இருந்த ஒருவரையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட சிறுமி படல்கம பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....