15 1 scaled
இலங்கைசெய்திகள்

3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி : ஒருவருடன் கைது

Share

3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி : ஒருவருடன் கைது

திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் இருந்து சுமார் 3 மாதங்களாக காணாமல் போயிருந்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலபிட்டிய கொங்கடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரது தாயார் 3 மாதங்களுக்கு முன்னர் படல்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன சிறுமியை பொலிஸார் பலமுறை தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர், சிறுமியைக் கண்டுபிடிக்கும் நோக்கில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பல குழுக்கள் களமிறக்கப்பட்டன.

குறித்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியிருப்பதாக பொலிஸ் குழுவிற்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதற்கமைய, அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழு, சிறுமியையும், சிறுமியுடன் இருந்த ஒருவரையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட சிறுமி படல்கம பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...