இலங்கைசெய்திகள்

திலீபனை நினைவேந்த ரவிகரனுக்கு தடையுத்தரவு!

Share
ravi 1
Share

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தியாக தீபம் திலீபனுடைய 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ளவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதிவான் நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ரவிகரனுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த தடையுத்தரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இன்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் வீட்டுக்கு நேரில் சென்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு பொலிஸார் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் ஊடாக திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2021 09 25 at 2.20.16 AM 1 WhatsApp Image 2021 09 25 at 2.20.16 AM 2 WhatsApp Image 2021 09 25 at 2.20.16 AM

Share

1 Comment

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...