tamilni 57 scaled
உலகம்செய்திகள்

பற்றியெரியும் மத்திய கிழக்கு… செங்கடலில் மூழ்கும் பிரித்தானிய சரக்கு கப்பல்

Share

பற்றியெரியும் மத்திய கிழக்கு… செங்கடலில் மூழ்கும் பிரித்தானிய சரக்கு கப்பல்

ஈரானிய ஆதரவு ஹவுதிகளால் தாக்குதலுக்கு இலக்கான பிரித்தானிய சரக்கு கப்பல் ஒன்று செங்கடலில் மூழ்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் Khor Fakkan பகுதியில் இருந்து பல்கேரியாவின் வர்ணா பகுதிக்கு புறப்பட்டு சென்ற Rubymar சரக்கு கப்பலானது ஏமன் கடற்பகுதியில் ஹவுதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.

தொடர்புடைய கப்பலின் ஊழியர்கள் பத்திரமாக மீட்கபட்டாலும், அந்த கப்பலை கைவிடும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 2 வாரங்களுக்கு முன்னர் நடந்த இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ள Rubymar சரக்கு கப்பல் தற்போது மூழ்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய ராணுவத்தினரே, கப்பல் ஊழியர்களை மீட்டுள்ள நிலையில், கப்பலை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றே பிரித்தானியாவின் UKMTO அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, ஹவுதிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் Yahya Saree விடுத்த அறிக்கையில், Rubymar சரக்கு கப்பல் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

காஸா பகுதியில் இஸ்ரேலின் கன்மூடித்தனமான தாக்குதலுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே செங்கடல் தாக்குதலை முன்னெடுப்பதாக ஹவுதிகள் அறிவித்திருந்தனர்.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான சரக்கு கப்பல்கள் பாதை மாறி பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், முதன்மையான நிறுவனங்கள் பல சேவையை நிறுத்திக் கொண்டது.

இதனால், Suzuki, Tesla, BP, Shell, Qatar Energy, DHL, FedEx, Adidas, Marks & Spencer, Next, Primark, Sainsbury’s, மற்றும் Target உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் உலகளாவிய கப்பல் கொள்கலன்களின் கட்டணம் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் 300 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

மட்டுமின்றி, கப்பல் போக்குவரத்து மீதான ஹவுதிகளின் தாக்குதல்களை நிறுத்துவதற்காக பிரித்தானியாவும் அமெரிக்காவும் சமீப வாரங்களாக கூட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...