tamilni 30 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாமல் தலைமையில் எதிர்க்கட்சியில் 40 எம்.பி.க்கள்

Share

நாமல் தலைமையில் எதிர்க்கட்சியில் 40 எம்.பி.க்கள்

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாற்பது உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் அமர வைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கத் தலைவர்கள் அல்லாதவர்களுக்கும் பொது மக்கள் முன்னணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுன கட்சி எடுத்த இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் பொதுத் தேர்தலில் எவருக்கும் வேட்புமனு வழங்காமல் இருப்பது குறித்தும் அக்கட்சி கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், சுமார் இருபது எம்.பி.க்கள் ஏற்கனவே அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தயாராக உள்ளதாகவும், அந்த எண்ணிக்கை நாற்பதாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நாமல் ராஜபக்சவின் கருத்தின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் தற்போது எதிர்க்கட்சிக்கு செல்லும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சிலர் முதலில் பொதுத்தேர்தலை நடத்த விரும்புவதாகவும் போலியான செய்திகளை பரப்பி நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...