tamilni 30 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாமல் தலைமையில் எதிர்க்கட்சியில் 40 எம்.பி.க்கள்

Share

நாமல் தலைமையில் எதிர்க்கட்சியில் 40 எம்.பி.க்கள்

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாற்பது உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் அமர வைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கத் தலைவர்கள் அல்லாதவர்களுக்கும் பொது மக்கள் முன்னணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுன கட்சி எடுத்த இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் பொதுத் தேர்தலில் எவருக்கும் வேட்புமனு வழங்காமல் இருப்பது குறித்தும் அக்கட்சி கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், சுமார் இருபது எம்.பி.க்கள் ஏற்கனவே அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தயாராக உள்ளதாகவும், அந்த எண்ணிக்கை நாற்பதாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நாமல் ராஜபக்சவின் கருத்தின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் தற்போது எதிர்க்கட்சிக்கு செல்லும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சிலர் முதலில் பொதுத்தேர்தலை நடத்த விரும்புவதாகவும் போலியான செய்திகளை பரப்பி நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...