10 scaled
உலகம்செய்திகள்

சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதலாவது ஆட்டுக்குட்டி!

Share

சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதலாவது ஆட்டுக்குட்டி!

சீனாவில் முதல் முறையாக உயிரணு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 2 ஆட்டுக் குட்டிகள் பிறந்துள்ளன.

சீனாவின் ஜிங் ஹாய் மாநிலத்தில் இந்த ஆட்டுக் குட்டிகள் பிறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், சீனாவின் நோர்த்வெஸ்ட் ஏ&எப் பல்கழைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழுவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் முதன்முறையாக உயிரணு குளோனிங் முறையில் பிறந்த ஆட்டுக் குட்டிகள் இவையாகும்.

பிறந்த முதலாவது ஆட்டுக் குட்டி, 3.4 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதென இந்த குளோனிங் முறையில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரணு குளோனிங் முறையில் தற்போது மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் தொடர்பான மேலதிக விடயங்களை வெளியிட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆட்டுக் குட்டிகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட உயிரணு குளோனிங் முறை, கடந்த காலங்களில் நாய், முயல், பசு, பன்றி உள்ளிட்ட பல மிருகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...