tamilni 566 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக வெல்லும்

Share

பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக வெல்லும்

பொதுஜன பெரமுன கட்சி ஆமை போன்றது, அமைதியாக வெற்றிகளைப் பெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயமாக வெற்றி பெறும். தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக இருக்கின்றது.

ஆனால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக எங்கள் கட்சியை நாங்கள் அமைதியாக பலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதனை அறியாத பல்வேறு கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் தாங்களே வெற்றி பெறுவோம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் தற்போதைய நிலைமை ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான ஓட்டப் பந்தயத்தைப் போன்றது. பந்தயத்தின் தொடக்கத்தில் முயல் முன்னிலையில் இருந்த போதிலும் இறுதியில் ஆமை வென்றது போன்று மொட்டு கட்சியும் இறுதியில் வெற்றி பெறும். நாட்டுப்புறக் கதையில் பந்தயத்தின் நடுவில் முயல் உறங்கியதே அது தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.

ஆனால் உண்மையில் போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆமைக்கே உரித்தான உத்திகள் இருந்தமையால் ஆமை வென்றது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...