இந்தியாசெய்திகள்

இந்தியாவில் 200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

Share
tamilnih 24 scaled
Share

இந்தியாவில் 200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

இந்தியாவின் டெல்லியில் 50 கிலோ எடையுள்ள 200 கோடி ரூபாய் பெறுமதி கொண்ட சூடோ பெட்ரைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் பல தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த போதைப்பொருளை கடத்தி வந்த 3 பேரிடம் அண்மையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரே இந்த கடத்தல் குழுவின் மூளையாக செயற்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியில் டெல்லி பொலிஸ் சிறப்பு பிரிவோடு, போதை பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து ஈடுபட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களில் கிட்டத்தட்ட 45 முறை போதைப்பொருள்களை சர்வதேச சந்தைகளுக்கு கடத்தியிருப்பதாகவும், அவற்றின் மதிப்பு 2 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...