tamilni 365 scaled
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான பணத் தொகை

Share

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான பணத் தொகை

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் வெளியாரின் தலையீடுகள் இன்றி நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெற வேண்டுமானால் தகுதியுடைய அனைவரும் மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்காத எவருக்கும் நலன்புரி நன்மைகள் கிடைக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்றும் நடவடிக்கை கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகியது.

அஸ்வெசும முதல் கட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்பாத மற்றும் குடும்பங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஆனால் வீட்டுத் தகவல் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத அனைவரும் இரண்டாவது கட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் வெளியாரின் தலையீடுகள் இன்றி நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...