tamilni 316 scaled
இலங்கைசெய்திகள்

காதல் உறவை முறிக்க பெண் ஒருவர் மோசமான செயல்

Share

காதல் உறவை முறிக்க பெண் ஒருவர் மோசமான செயல்

காதலர் தினமான நேற்றைய தினம் பெண் ஒருவர் தனது கணவரின் உதவியுடன் முன்னாள் காதலனை அடித்து இரண்டு கால்களையும் உடைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடநடுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காலி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் போது ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவை பேணிவந்துள்ளார்.

தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகும் அவர்கள் சில காலம் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் குறித்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது பழைய காதலரும் அவருடன் உறவைப் பேணி வந்துள்ளார்.

எனினும், அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருவது பிரச்சினையாக மாறியமையினால் கணவரின் உதவியுடன் தனது முன்னாள் காதலனின் தொலைபேசி அழைப்பிற்கு அன்பாக பதிலளித்து கடற்கரைக்கு வரவழைத்து நிர்வாணமாக்கி இரண்டு கால்களையும் அடித்து உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...