tamilni 315 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் எண்ணிக்கை அதிகரிப்பு

Share

பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடை விலகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்களில் 53 வீதமானவர்களுக்கு பாடசாலை புத்தகப் பை ஒன்றை கொள்வனவு செய்யக்கூட முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது 43 இலட்சம் மாணவ, மாணவிகள் பாடசாலை செல்வதாகவும், அவர்களில் சுமார் 1,30,000 மாணவர்கள் இடை விலகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாடசாலை மாணவர்கள் இடை விலகுவது நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக அமையும் எனவும் அறிவார்ந்த இலங்கை சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு இடையூறாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் 28 லட்சம் மக்கள் நுண்கடன் திட்டத்தில் சிக்கி உள்ளதாகவும், நுண்கடன்களை செலுத்த முடியாத 200க்கும் மேற்பட்டவர்கள் அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடன் பொறியில் சிக்குபவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பெண்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...