Rasi palan new10 5 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மோசமான முறையில் உணவு தயாரித்த ஹோட்டலுக்கு அபராதம்

Share

கொழும்பில் மோசமான முறையில் உணவு தயாரித்த ஹோட்டலுக்கு அபராதம்

கொழும்பில் செயற்படும் ஹோட்டல் ஒன்றுக்கு மாளிகாகந்த பிரதான நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம இன்று 50000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

சமைத்த உணவில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற மற்றும் பூஞ்சை பிடித்த மிளகை வழங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் சார்பில் ஆஜரான ஹோட்டலின் உணவு மற்றும் குளிர்பான மேலாளர் தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மத்திய கொழும்பு சுகாதார மருத்துவ அலுவலகத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 02 ஆம் திகதி Cinnamon Lakeside Colombo ஹோட்டலில் இரவு உணவருந்தச் சென்ற தம்பதியர் தமக்கு கெட்டுப்போன சூப்பை வழங்கியதாக கோட்டை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதற்கமைய, இந்த வழக்கு தாக்கப்பட்ட நிலையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...