tamilnaadi 65 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவிற்காக இரவில் நடத்தப்பட்ட பூஜை : கூடிய மகிந்த குடும்பம்

Share

சனத் நிஷாந்தவிற்காக இரவில் நடத்தப்பட்ட பூஜை : கூடிய மகிந்த குடும்பம்

விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஆத்ம சாந்திக்காக கொழும்பில் விசேட பூஜை வழிபாடொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசேட பூஜை வழிபாடு நேற்றையதினம் இரவு அத்தனகம பன்யாலங்கார தேரரினால் நடத்தப்பட்டது.

இந்த பூஜை நிகழ்வுகளின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சனத் நிஷாந்தவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடந்த மாதம் 25ஆம் திகதி ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார்.

இவர் ராஜபக்ச குடும்பத்தின் தீவிர விசுவாசியாக பார்க்கப்பட்டதுடன், காலி முகத்திடல் போராட்டக்களத்தில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியன் பின்னர் அதிக சர்ச்சைகளுக்குள் உள்ளான ஒரு நபராக பார்க்கப்பட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணத்தை பின்னொரு நாளில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...