tamilnaadi 65 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவிற்காக இரவில் நடத்தப்பட்ட பூஜை : கூடிய மகிந்த குடும்பம்

Share

சனத் நிஷாந்தவிற்காக இரவில் நடத்தப்பட்ட பூஜை : கூடிய மகிந்த குடும்பம்

விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஆத்ம சாந்திக்காக கொழும்பில் விசேட பூஜை வழிபாடொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசேட பூஜை வழிபாடு நேற்றையதினம் இரவு அத்தனகம பன்யாலங்கார தேரரினால் நடத்தப்பட்டது.

இந்த பூஜை நிகழ்வுகளின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சனத் நிஷாந்தவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடந்த மாதம் 25ஆம் திகதி ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார்.

இவர் ராஜபக்ச குடும்பத்தின் தீவிர விசுவாசியாக பார்க்கப்பட்டதுடன், காலி முகத்திடல் போராட்டக்களத்தில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியன் பின்னர் அதிக சர்ச்சைகளுக்குள் உள்ளான ஒரு நபராக பார்க்கப்பட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணத்தை பின்னொரு நாளில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...