tamilni 191 scaled
உலகம்செய்திகள்

வேறு வழியில்லை… கனடாவில் மீண்டும் பணிக்குத் திரும்பும் நிலைக்கு ஆளாகியுள்ள வயதானவர்கள்

Share

வேறு வழியில்லை… கனடாவில் மீண்டும் பணிக்குத் திரும்பும் நிலைக்கு ஆளாகியுள்ள வயதானவர்கள்

கனேடிய மாகாணமொன்றில், விலைவாசி உயர்வு காரணமாக செலவுகளை சமாளிக்க முடியாததால், வயதானவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கனடாவில் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் வாழும் ஜேனட் ப்ரஷ் (77), எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை, ஆனால், அது நன்றாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது என்கிறார்.

வாடகை வீட்டில் வசிக்கும் ஜேனட்டுக்கு ஒரே வருவாய்தான். ஏற்ற இறக்கம் இல்லாத அந்த வருவாயில் பாதியை வீட்டு வாடகைக்காக பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறார் அவர்.

லீஸ் விதிகள் காரணமாக, தான் முந்தைய வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகக் கூறும் ஜேனட், இப்போது தான் குடியிருக்கும் வீட்டுக்கு, முந்தைய வீட்டைவிட மாதம் 250 டொலர்கள் கூடுதலாக செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார்.

இந்த வயதில், வீடில்லாமல் தெருக்களில் வாழும் நிலைமை ஏற்படுமானால், அது பயங்கரம் என்று கூறும் ஜேனட், எனக்கு அந்த எண்ணமே திகிலை ஏற்படுத்துகிறது என்கிறார்.

ஆக, வீட்டுக்கு வாடகை கொடுத்தாகவேண்டும், விலைவாசியோ அதிகரித்துக்கொண்டே போகிறது. அதை சமாளிக்க என்ன செய்வது?

வேறென்ன வழி, ஏதாவது வேலைக்குப் போகவேண்டியதுதான் என்கிறார் ஜேனட். ஆக, பகுதி நேர வேலைக்குச் செல்ல திட்டமிட்டு வரும் அவர், இந்த வயதில் உடலை வருத்தி கடினமான வேலைகள் செய்யமுடியாது. ஆகவே, தன் அறிவைப் பயன்படுத்தி செய்யும் வேலை எதையாவது தேடவேண்டியதுதான் என்கிறார்.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....