tamilni 182 scaled
உலகம்செய்திகள்

சிறுவன் மீது நாயை ஏவிய இஸ்ரேலிய இராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்

Share

சிறுவன் மீது நாயை ஏவிய இஸ்ரேலிய இராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்

ஹமாஸ் அமைப்புடன் காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் நான்கு வயது குழந்தையை தாக்குவதற்கு இராணுவ நாயை அனுப்பியதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆவணங்கள் குறிப்பிடுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 04 ஆம் திகதி ஹஷாஷ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் இராணுவ நாயை இஸ்ரேலிய இராணுவத்தினர் அவிழ்த்துள்ளனர்.

இதன்போது அந்தக் கட்டிடத்தில் இருந்த நான்கு வயதுடைய இப்ராஹிம் ஹஷாஷ் என்ற சிறுவனை இரத்தம் ஊற்றுமளவுக்கு இராணுவ நாய் தொடர்ந்து கடித்துள்ளது.

மூன்று நிமிடங்களுக்கு இந்தத் தாக்குதல் தொடர்ந்ததாகவும் அதன் பின்னர் இஸ்ரேல் இராணுவத்தினர் நாயைப் பிடித்ததாகவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் நப்ளஸில் உள்ள ரஃபிடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இஸ்ரேல் இராணுவம் தனது நாய்கள் மூலம் பொதுமக்களையும், குழந்தைகளையும் தொடந்து தாக்கிவருகிறது என சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...