tamilni 183 scaled
உலகம்செய்திகள்

குற்ற வழக்குகள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் வியூகம்

Share

குற்ற வழக்குகள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் வியூகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தன் மீது சுமத்தப்பட்ட குற்ற வழக்கு விசாரணையை ஒத்திவைப்பது டொனால்ட் ட்ரம்பின் எண்ணம் என அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் சட்டத்தரணி நீமா ரஹ்மானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவிக்காலத்தில் இருந்தபோது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்ற வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க முடியாது என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அறிவிப்பது காலவரையின்றி தாமதமாகும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் பதவியில் இருந்தபோது 2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங்டனின் தலைநகரில் இடம்பெற்ற பொதுக் கலவரம் தொடர்பாக அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைப்பது முன்னாள் ஜனாதிபதியின் எண்ணம் என அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் சட்டத்தரணி நீமா ரஹ்மானி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை நடத்த முடியாது என்பதே இதற்கு காரணம் என ரஹ்மானி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...