tamilni 149 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – சரத் பொன்சேகா இடையில் விசேட சந்திப்பு

Share

ஜனாதிபதி – சரத் பொன்சேகா இடையில் விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சுமார் இருபது நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றிய போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அவையை விட்டு வெளிநடப்பு செய்திருந்தனர்.

எனினும் சரத் பொன்சேகா, குமார வெல்கம, ராஜித சேனாரட்ன போன்ற கட்சியின் சில உறுப்பினர்கள் அவையில் அமர்ந்திருந்து ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...