tamilni 67 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய தலைமைத்துவ வர்க்கத்திற்கு மால்கம் ரஞ்சித் அழைப்பு

Share

இலங்கையில் புதிய தலைமைத்துவ வர்க்கத்திற்கு மால்கம் ரஞ்சித் அழைப்பு

தேசத்தை ஒப்படைக்கும் அளவுக்கு தைரியம் ஏற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இலங்கை மக்களை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (04.02.2024) நடைபெற்ற ஆராதனையின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“தற்போதைய தலைமைத்துவ வர்க்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். கடந்த ஆண்டுகளில் நாட்டை ஆட்சி செய்தவர்கள் மக்கள் நலனைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே நினைத்தனர்.

எனவே இந்த தலைமைத்துவத்தை அகற்றி புதிய தலைமைத்துவ வர்க்கத்தை கொண்டு வருவது அவசியம்.

இலங்கைத் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் மாத்திரமே சில பிரிவு மக்களைப் பயன்படுத்தினர்.

எனினும் சிங்கப்பூர் தலைவர்கள், சீனர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் மலாய் மக்களை ஒன்றிணைத்தனர்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...