4 scaled
உலகம்செய்திகள்

இனப்படுகொலையை ஆதரிக்கிறீர்கள்! ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த மக்கள்

Share

இனப்படுகொலையை ஆதரிக்கிறீர்கள்! ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த மக்கள்

அமெரிக்காவின் மிச்சிகன் நகருக்கு சென்ற ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டனர்.

மிச்சிகன் நகருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வருகை புரிந்தபோது, பாலஸ்தீன ஆதரவாளர்கள் பலர் கையில் பதாகைகளுடன் அவருக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அவர்கள், ‘பைடன் பைடன் உங்களை பார்க்க முடியவில்லை, நீங்கள் கொலைக் களத்தில் இருக்கிறீர்கள்’ என்று கூச்சலிட்டனர்.

அத்துடன் ஜோ பைடன் இனப்படுகொலையை ஆதரிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சிலரின் பதாகைகளில், ஏமனை கைவிட்டு, பொதுத்தேர்தலில் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று எழுதியிருந்தனர்.

எனினும் கலகத் தடுப்புப் பொலிஸார் அவர்களை சுற்றி வளைத்து தடுத்தனர். மிச்சிகனுக்கு பிரச்சார பயணத்தில் ஜோ பைடன் தொழிற்சங்க ஊழியர்களை சந்தித்தார்.

ஆனால் அவரால், காசாவில் போர் மற்றும் மத்திய கிழக்கில் சுழலும் பதட்டங்கள் பற்றிய சர்ச்சையில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...