24 65b8b5e815573
உலகம்செய்திகள்

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

Share

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மீன்பிடிக் கப்பலையும் அதிலிருந்த 19 பாகிஸ்தானியர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டனர்.

இந்திய கடற்படை இரண்டு நாட்களுக்குள் மற்றொரு மாபெரும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கொச்சியில் இருந்து 800 மைல் தொலைவில் கடற்கொள்ளையர்களின் வசம் இருந்த Al Naeemi எனும் ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது.

INS Sumitra என்ற போர்க்கப்பல் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

கடத்தப்பட்ட கப்பலில் 19 பாகிஸ்தான் மாலுமிகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டுவிட்டதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

மேலும் கப்பலில் இருந்த 11 சோமாலிய கடற்கொள்ளையர்களையும் இந்திய கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

இந்த மீட்பு பணியில் இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் கலந்து கொண்டனர்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய போர்க்கப்பல்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர் எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளுக்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவை அனுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன், FV Iman என்ற மற்றொரு ஈரானிய மீன்பிடி கப்பல், கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் ஐஎன்எஸ் சுமித்ரா மீட்பு பணியை மேற்கொண்டது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...