tamilni 437 scaled
இலங்கைசெய்திகள்

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் நடைமுறைக்கு

Share

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் நடைமுறைக்கு

அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் அடுத்த வாரம் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்பின் கடந்த 24ஆம் திகதி நடந்த வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனர்.

அத்துடன் சுமார் 62 எம்.பி.க்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது 46 வாக்குகள் பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலமானது, தற்போது சட்ட வரைவுத் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக சபாநாயகரின் அனுமதிக் கையொப்பம் இன்னும் இடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

எனினும் எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையில் குறித்த சட்டமூலமானது சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை நடைமுறைப்படுத்த அங்கீகாரம் வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...