1 9 scaled
சினிமாசெய்திகள்

மறைந்தும் பசி போக்கும் கேப்டன் விஜயகாந்த்.. அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானம்

Share

மறைந்தும் பசி போக்கும் கேப்டன் விஜயகாந்த்.. அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானம்

விஜயகாந்த் மறைந்து நாளையுடன் 30 நாட்கள் ஆகவுள்ள நிலையில் ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் மறைந்து நாளையுடன் 30 நாட்கள் ஆகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் விஜயகாந்த் சமாதியில் 50,000 பேர் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளதாக தேமுதிக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதாவது மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கப்படுகிறது. இதனை பலரும் சாப்பிட்டு வருகின்றனர்.

விஜயகாந்தை யார் பார்க்க வந்தாலும் முதலில் சாப்பிட்டு விட்டீர்களா என்று தான் கேட்பார். அவரின் கொள்கை படியே அன்னதானம் வழங்கப்படுவதாக தே.மு.தி.க.வினர் கூறுகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...