1695213021 arrest 6 1
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு சிறை

Share

வெளிநாடொன்றில் பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு சிறை

வெளிநாடொன்றில், வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் அத்துமீறிய இந்தியர் ஒருவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் இந்தியரான சிங்காரம் (Singaram Palianeapan, 61) என்ற நபர், தான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள வீடு ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, அந்தப் பெண் உணவு வாங்கச் சென்றபோது, தேநீர் வாங்கிக்கொள்ளச் சொல்லி அவருக்கு பண்ம் கொடுத்துள்ளார் சிங்காரம்.

அந்தப் பெண் மறுத்தும், அவரை வற்புறுத்தி பணத்தைக் கொடுத்த அவர், பின்னர் தான் வேலை செய்யும் வீட்டுக்கு செல்லப் புறப்பட்ட அந்த பெண்ணை பின்தொடர்ந்துள்ளார்.

லிப்டில் ஏறியதும், சிங்காரம் தனது வீடு இருக்கும் 17ஆவது தளத்தின் பொத்தானை அழுத்த, அந்தப் பெண்ணோ, தான் வேலை செய்யும் வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தின் பொத்தானை அழுத்த முயன்றுள்ளார். சிங்காரம் அவரை தடுத்துள்ளார்.

லிப்ட் புறப்பட்டதும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ளத்துவங்கியுள்ளார் அவர். லிப்ட் 17ஆவது தளத்தை அடைந்ததும், என் கூட வா என அந்தப் பெண்ணை அழைத்துள்ளார் சிங்காரம். அந்தப் பெண் மறுக்கவே, மீண்டும் லிப்டுக்குள் நுழைந்த அவர், 7ஆவது தளத்தில் பொத்தனை அழுத்திவிட்டு, மீண்டும் அந்தப் பெண்ணிடம் அத்துமீறியுள்ளார்.

இந்தக் காட்சிகள் லிப்டிலுள்ள CCTVகமெராவில் பதிவாகியுள்ளன.

அன்றே பொலிசார் சிங்காரத்தைக் கைது செய்ய மறுநாள் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் அவர்.

ஒரு மாதம் கழித்து வேறொரு நபருடன் சண்டையிட்ட சிங்காரம் அவரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

சிங்காரத்துக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...