திலீபன் 1 scaled
இலங்கைசெய்திகள்

திலீபன் நினைவுத்தூபியில் பொலிஸ் குவிப்பு!

Share

நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எவரையும் கைதுசெய்யும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்துக்கு அமைய நீதிமன்ற உத்தரவின்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உயர் மட்டத்தில் இருந்து பணிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய யாழ்.தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவஞ்சலி நிகழ்வு கடந்த 15ஆம் திகதி நல்லூரில் உள்ள நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...