tamilni 378 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் திருமணமான புதுமணப் பெண்ணுக்கு அதிர்ச்சி

Share

கொழும்பில் திருமணமான புதுமணப் பெண்ணுக்கு அதிர்ச்சி

கொழும்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நாளில் கணவர் கொடுத்த 23 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருடிச் சென்றதாக 22 வயது பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பு 12 ஸ்ரீமன் பண்டாரநாயக்க மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், 23 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்திற்கு மேலதிகமாக, 60 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாகவும் அவரது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி தனது திருமணம் நடைபெற்ற நிலையில் தங்க நகைகளை அலுமாரியில் வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதில் கணவரால் பரிசாக கொடுக்கப்பட்ட சுமார் 23 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் சுமார் 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது சொந்த தங்கப் நகைகள் அனைத்தும் பெட்டிகளில் அடைத்து வைத்ததாகவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் தங்கம் வைத்திருந்த அலுமாரியின் சாவியை ஒரு பையில் வைத்து ஒரு இடத்தில் வைத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் பணிப்பெண்ணும் தந்தையும் மட்டுமே இருந்ததாகவும், சில மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்ததாகவும், பையில் இருந்த சாவியை தேடி பார்த்தபோது சரியான இடத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை அலுமாரியின் பூட்டை உடைத்து பார்த்தபோது, ​​அங்கு தங்கப் பொருட்கள் எதுவும் இல்லை என அவர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...