tamilni 357 scaled
இலங்கைசெய்திகள்

நிலக்கடலை இறக்குமதி தொடர்பில் பணிப்புரை

Share

நிலக்கடலை இறக்குமதி தொடர்பில் பணிப்புரை

நிலக்கடலை அறுவடை சந்தைக்கு வெளியிடப்படுவதற்கு முன்னர் 2000 மெற்றிக் தொன் நிலக்கடலையை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி அனுப்பியுள்ள கடிதத்தின் பிரகாரம் 2000 மெற்றிக் தொன் நிலக்கடலை கையிருப்பு பெப்ரவரி மாத நடுப்பகுதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022/23 உயர் பருவம் மற்றும் 2023 இளவேனிற் பருவத்தில் நிலக்கடலை அறுவடை போதுமானதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய நீர் வசதிகள் இன்மை மற்றும் உரங்கள் பயன்படுத்தப்படாமை காரணமாக 50 முதல் 55 சதவீதம் வளர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சின் செயலாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உடனடியாக 2000 மெற்றிக் தொன் நிலக்கடலையை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலக்கடலைக்கு மேலதிகமாக 1000 மெற்றிக் தொன் உழுந்து மாவையும் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சின் செயலாளர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...