tamilni 307 scaled
இலங்கைசெய்திகள்

டயானா கமகேவிடம் 10 கோடி பேரம் பேசிய ஜனாதிபதி வேட்பாளர்

Share

டயானா கமகேவிடம் 10 கோடி பேரம் பேசிய ஜனாதிபதி வேட்பாளர்

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ளதால் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்க பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

இவ்வகையில் ஜனாதிபதித் ​தேர்தலின் போது ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக வேட்பாளர் ஒருவர் பத்து ​கோடி வரை பேரம் பேசியுள்ளாதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பல வேட்பாளர்கள் தமது தேர்தல் பரப்புரைகளை இப்போதிருந்தே தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவும் வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சில வேட்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வாறு ஆதரவைத் தரும் பட்சத்தில் பணம் மற்றும் பிற வெகுமதிகள் மற்றும் சலுகைகள் போன்றவற்றை வழங்குவதாகவும் வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர்.

இதேவேளை, அண்மைய நாட்களில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்குச் சென்ற இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளுமாறு அவரிடம் ​வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிலும் ஒரு வேட்பாளர் தனக்கு ஆதரவளிப்பதற்காக டயனா கமகேவிடம் 10 கோடி ரூபாய் வரை அன்பளிப்பாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் வாக்களித்துள்ளார்.

எனினும் குறித்த வேட்பாளரின் கோரிக்கையை டயனா கமகே கடுமையாக நிராகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...