Dullas 666 1
செய்திகள்இலங்கை

காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ்

Share

காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ்

இறுதிப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் பலர் தற்போது வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்கின்றனர்.

இவ்வாறு காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த வகையிலும் மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய விடயமும் அல்ல. காணாமல் போனதாக கூறப்படும் பலர் புலர்பெயர் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தமது பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கும் பெற்றோர் கண்ணீர் விடும் காட்சிகளை நாம் காண்கிறோம். எனவே இவர்கள் இலங்கையின் பிரஜைகள். இவர்கள் தொடர்பில் நாம் பொறுப்புடன் செயற்படும். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுவதே சிறந்தது.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் திட்டவட்டமாக என்னால் கூற முடியாது. இதனைக் கண்டறியவே காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெளிநாட்டு புலம்பெயர் இலங்கையர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து இது குறித்து பேச்சு நடத்தி தீர்மானங்களை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...