உலகம்செய்திகள்

பிரான்சிலிருந்து புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது

Share
205b0a345971e1e29e6a6b892515dbed1999f4f1 1597338164 5f357234 1200x630 1
Share

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்தோர் புறப்பட்ட படகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நான்கு பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்தோர் புறப்பட்ட படகு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் ஆங்கிலக்கால்வாயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த துயர சம்பவத்தில் நான்கு பேர் பலியான நிலையில், கடற்கரையில் மேலும் ஒரு புலம்பெயர்வோரின் உடல் கரையொதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. உயிரிழந்தோர், சிரியா நாட்டவர்கள் என கருதப்படுகிறது.

மேலும், கடுங்குளிரில் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த சுமார் 30 பேரை மீட்டதாக பிரான்ஸ் கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...