OIF 3
இந்தியாசெய்திகள்

கால்வாயில் சடலமாக கிடந்த 27 வயது பெண் மாடல்!

Share

இந்திய மாநிலம் ஹரியானாவில் இளம் பெண் மொடல் ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா பகுஜாவிற்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். ஆனால், திவ்யா அதை வீடியோவாக எடுத்து அபிஜீத்தை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி, ஹொட்டலில் வைத்து திவ்யா கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இதனால் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஹரியானாவின் தோஹானாவில் உள்ள பக்ரா கால்வாயில் திவ்யா பகுஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

குர்கான் பொலிஸார் கூறும்போது, பஞ்சாபின் மூனாக் பகுதியில் உள்ள கால்வாயில் திவ்யாவின் சடலம் வீசப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், Hisarயில் உள்ள குருத்வாரா சாலையில் வசிக்கும் ரவி ரங்கா, பால்ராஜ் கில் ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

அத்துடன் அபிஜீத் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான ரவி பங்கா தலைமறைவானார். அவரை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...