tamilnaadif 7 scaled
இலங்கைசெய்திகள்

நடுவானில் பெண்ணுக்கு மாரடைப்பு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Share

பிரித்தானியாவுக்கு பயணித்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பெண்ணொருவருக்கு இருமுறை ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் விமானம் இத்தாலியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

Tunis பகுதியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணித்த பயணியொருவர் மாரடைப்பால் அவதிப்பட்டுள்ளார்.

இதன்போது விமான ஊழியர்களும் வைத்தியர் ஒருவரும் மாரடைப்பால் அவதியுற்ற பயணிக்கு CPR அளிக்க முன்வந்துள்ளனர்.

இதனையடுத்து புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே விமானத்தை அவசரமாக தரையிறக்கும் கட்டாயத்திற்கு விமானி தள்ளப்பட்டதை தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டு, இத்தாலியின் ஓல்பியா விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

லிபியா நாட்டவரான பெண் தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக் குழுவினரால் அந்த பயணி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன் உரிய நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மேலதிக வைத்திய சிகிச்சை பெறும் பொருட்டு அந்த பெண் இத்தாலியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அவருடன் அவர் மகனும் உடனிருந்தார் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...