tamilni 193 scaled
இலங்கைசெய்திகள்

புத்தருக்காக உயிர் தியாகம் செய்ய கோரும் பௌத்த போதகர்

Share

கௌதம புத்தருக்காக உயிரைத் தியாகம் செய்யுமாறு அடியார்களை கோரும் மற்றுமொரு பௌத்த மத போதகர் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பௌத்த மதத்தை திரிபுபடுத்தும் வகையிலான போதனைகளை இந்த நபர் முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவலோகிகேஷ்வர என்ற பெயரால் குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.

புத்தருக்காக உடலை எரித்துக் கொள்ளுமாறு இவர் தனது அடியார்களுக்கு போதனை செய்வதாக பலாங்கொட காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறான மத போதகர்களினால் பலர் தவறான தூண்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான ஓர் பின்னணியில் மீண்டும் ஒரு மத போதகர் அடியார்களை தவறான முடிவை மேற்கொள்ளுமாறு அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளுமாறு தூண்டுதல் பாரிய குற்றச் செயலென காஷ்யப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் நாட்டுக்கு வருகை தர முன்னதாகவே குறித்த நபர் தொடர்பில் குற்ற விசாரணை பிரிவிற்கும், ஏனைய உரிய தரப்புகளுக்கும் தகவல்கள் வழங்கிய போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நபர் தனது மகளை தகாத தீண்டலுக்கு உட்படுத்திய நபர் என காஷ்யப்ப தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் இந்த நபர் நாய்களை பராமரித்து கொண்டிருந்தவர் எனவும் நாட்டுக்கு திரும்புவதற்கு கூட பணம் இல்லாமல் ஏனைய இலங்கையர்கள் பணம் திரட்டி நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு நபரின் பின்னாலேயே கண்மூடித்தனமான அடியார்கள் பின் தொடர்வதாகவும் பௌத்த பிக்குணிகளும் இவரை வணங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நபர் தேரவாத பௌத்தத்தை விமர்சனம் செய்து மஹாநாயக்க பௌத்த கொள்கைகளை போற்றும் வகையிலான திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதாக தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் பௌத்த துறவி அல்ல எனவும் மனநோயாளி எனவும் இவருக்கு மனநோய் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமெனவும் காஷ்யப்ப தேரர் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...