tamilni 192 scaled
இலங்கைசெய்திகள்

சாதகமான தகவலை வழங்கிய மத்திய வங்கி ஆளுனர்

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து சாதகமான தகவலை இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடன் மறுசீரமைப்பு முன்னணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டுக் கடனின் முதிர்ச்சியை நீ;டிக்கவும், அரசாங்க நிதி மீதான உடனடி அழுத்தத்தைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்ட உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் செயல்பாடு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கடனை மறுசீரமைப்பதற்காக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஆகிய இரண்டுடனும் கொள்கையில் இலங்கை ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

முக்கிய கடன் வழங்குபவர்களிடமிருந்து நீண்ட கால கடன் நிவாரணத்தைப் பெறுவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

ஏனைய தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், அவற்றிலும் இது போன்ற ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...