tamilni 111 scaled
இலங்கைசெய்திகள்

தொடரும் தனியார் வாகன இறக்குமதி தடை

Share

பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, இலங்கை அரசாங்கம் தனியார் மோட்டார் வாகன இறக்குமதி தடையை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிய இயந்திர திறன் கொண்ட வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் பரவியுள்ளன.

எனினும், இலங்கை அரசாங்கம் பொருளாதார விவேகத்திற்கான அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கவனம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ள நிலையில், நாடு அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய அவசர முடிவுகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

அதேவேளை, நாட்டின் கையிருப்பு மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு, உறுதியான ஆரோக்கிய நிலையை அடையும் போது மட்டுமே வாகன இறக்குமதி மீதான தடை நீக்கம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...