tamilnaadi 16 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காகவே குறித்த குழுவானது அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைக்கு முன்னர், இலங்கை அரசாங்கம் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மீளாய்வு நடவடிக்கை இந்த வருடம் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற விவாதத்தில், இலங்கையின் பொருளாதாரமானது ஒரு ஸ்திரநிலையை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள செலவுகள் மற்றும் வரி வருமானம் போன்றவற்றை தவிர சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட ஏனைய இலக்குகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...