tamilnaadi 16 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காகவே குறித்த குழுவானது அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைக்கு முன்னர், இலங்கை அரசாங்கம் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மீளாய்வு நடவடிக்கை இந்த வருடம் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற விவாதத்தில், இலங்கையின் பொருளாதாரமானது ஒரு ஸ்திரநிலையை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள செலவுகள் மற்றும் வரி வருமானம் போன்றவற்றை தவிர சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட ஏனைய இலக்குகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...