DSC7829 scaled
செய்திகள்இலங்கை

குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு

Share

குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருட கால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இலங்கையர்கள் குவைத்தில் பணியாற்றுவதற்கு மேலும் பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் தொற்று பரவல் மற்றும் கட்டப்பாடு, நாட்டுக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் போன்றன தொடர்பில் எடுத்துரைத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச,  தொற்றுபரவல் நீங்கி சமூக நிலை திரும்பும்போது இரு தரப்புகளுக்குமிடையிலான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள உள்ள வாய்ப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்திருந்தார்.

துறைமுக நகரம், சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் குவைத் அரசால் மேற்கொள்ளக் கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் இச் சந்திப்பில்  கலந்துரையாடினர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...