tamilni 86 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பலமான ஒருவரை வேட்பாளராக களமிறக்க பொதுஜன பெரமுன தீர்மானம்

Share

ஜனாதிபதி தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (04.01.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்துடன் கட்சியை கட்டியெழுப்பக்கூடிய, நாட்டின் தற்போதைய நிலைமைக்கு முகம்கொடுக்கும் பலம் கொண்ட ஒருவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நியமிக்கும்.

ஜனநாயக நாட்டில் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய தருணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏனைய கட்சி வெற்றி பெறும் என நினைத்து தேர்தலை ஒத்திவைத்தால் அரசியல் செய்ய முடியாது.

அரசியல் கட்சிகளுக்கு இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகும். அனைத்து முக்கிய தேர்தல்களும் இந்த ஆண்டு நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் ஒரே ஒரு தேர்தலுக்கு மட்டுமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணம் இல்லை என கூறுபவர்களிடம் நாடாளுமன்றம் நடத்த பணம் உள்ளதா என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

நாட்டை அபிவிருத்தி செய்த அரசியல் கட்சிகள் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...