tamilni 77 scaled
இலங்கைசெய்திகள்

வெள்ளவத்தை தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை

Share

வெள்ளவத்தையில் உள்ள தொலைபேசி நிலையமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து கொள்ளையில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய இலங்கை கடற்படை அதிகாரிகள் நால்வர் இன்று அதிகாலை வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பத்தேகம, பொரலஸ்கமுவ, கொடகவெல, பிபில பகுதிகளைச் சேர்ந்த 37 தொடக்கம் 38 வயத்திற்குட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டாளர் வெள்ளவத்தை பிரதேசத்தில் இரவு பகலாக இயங்கும் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

நேற்று இரவு இனந்தெரியாத நால்வர் வந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் அடையாள அட்டையை காட்டி நிறுவனத்தை பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கமைய, நிலையத்தை திறக்குமாறு ஊழியர்களை திறக்குமாறு கூறியுள்ளனர்.

கதவைத் திறந்து கொண்டு நிறுவனத்திற்குள் நுழைந்த அவர்கள் திடீரென ஊழியர்களுக்கு கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததுடன் 670,000 ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...