tamilni 77 scaled
இலங்கைசெய்திகள்

வெள்ளவத்தை தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை

Share

வெள்ளவத்தையில் உள்ள தொலைபேசி நிலையமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து கொள்ளையில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய இலங்கை கடற்படை அதிகாரிகள் நால்வர் இன்று அதிகாலை வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பத்தேகம, பொரலஸ்கமுவ, கொடகவெல, பிபில பகுதிகளைச் சேர்ந்த 37 தொடக்கம் 38 வயத்திற்குட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டாளர் வெள்ளவத்தை பிரதேசத்தில் இரவு பகலாக இயங்கும் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

நேற்று இரவு இனந்தெரியாத நால்வர் வந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் அடையாள அட்டையை காட்டி நிறுவனத்தை பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கமைய, நிலையத்தை திறக்குமாறு ஊழியர்களை திறக்குமாறு கூறியுள்ளனர்.

கதவைத் திறந்து கொண்டு நிறுவனத்திற்குள் நுழைந்த அவர்கள் திடீரென ஊழியர்களுக்கு கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததுடன் 670,000 ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...

அகில விராஜ் காரியவசம் 3
இலங்கை

காரியவசம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசாத்தினால், பொலிஸ் மா அதிபர் தொடர்பில்...

சுரேஷ் சலே
இலங்கை

சுரேஷ் சலேவினால் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள் பரிசீலனைக்கு!

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தன்னை குற்றப் புலனாய்வுத்...

திருட்டு
இலங்கை

விசேஷ வீட்டில் திருட்டு – யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், தாலிக்கொடி...