tamilni 6 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவருக்கு 176 மில்லியன் ரூபாய் அபராதம்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியரான குறித்த நபர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

176 மில்லியன் ரூபா பெறுமதியான 66 தங்க பிஸ்கட்டுகளை உள்ளாடையில் மறைத்து வைத்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போதே சுங்க அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க பிஸ்கட்டுகளை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்ததுடன், சந்தேகத்திற்கிடமான கேட்டரிங் நிறுவன ஊழியருக்கு 176 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் செலுத்த தவறியதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...