tamilni 6 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவருக்கு 176 மில்லியன் ரூபாய் அபராதம்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியரான குறித்த நபர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

176 மில்லியன் ரூபா பெறுமதியான 66 தங்க பிஸ்கட்டுகளை உள்ளாடையில் மறைத்து வைத்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போதே சுங்க அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க பிஸ்கட்டுகளை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்ததுடன், சந்தேகத்திற்கிடமான கேட்டரிங் நிறுவன ஊழியருக்கு 176 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் செலுத்த தவறியதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...