tamilni 445 scaled
இலங்கைசெய்திகள்

தவறான செயற்பாட்டால் இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

Share

தவறான செயற்பாட்டால் இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நுரைச்சோலை பிரதேசத்தில் மது விருந்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரே இவ்வாறு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு தனது நண்பர்கள் சிலருடன் மதுபான விருந்து ஒன்றில் கலந்து கொண்டதாகவும், வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த மக்கள் குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவருடன் வந்த ஒருவரை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நுரைச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பொலிஸ் அதிகாரியை மீட்டுள்ளனர்.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மது அருந்தியிருந்ததை அறிந்த வைத்தியர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்த பொலிஸ் உத்தியோகத்தர், இரவு வேளையில் யாருக்கும் தெரிவிக்காமல் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

இன்று காலை நுரைச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு வந்து தனது தனிப்பட்ட ஆடைகளுடன் சென்றுள்ளார்.

இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் விருந்திற்குச் செல்லும் வேளையில் தான் ஓய்வெடுக்கப் போவதாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும் ஆனால் அது தொடர்பில் எந்த குறிப்பும் இல்லையெனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...