202238 Freedman Ukraine
உலகம்செய்திகள்

100 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! ரஷ்யாவை எதிர்த்த உக்ரைன்

Share

100 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! ரஷ்யாவை எதிர்த்த உக்ரைன்

உக்ரேனிய கிறிஸ்தவர்கள் 100 ஆண்டுகளுக்கு பின்னர் டிசம்பர் 25ம் நாளான இன்று முதல் முறையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் இருந்து ரஷ்யா தனது அண்டைய நாடான உக்ரைனை தாக்கி வருகிறது. இதற்கு அடிபணியாத உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

இந்த தாக்குதலின் காரணமாக பல உயிரிழப்புகளும் கட்டிட சேதங்களும் ஏற்பட்டுள்ளன. 665 நாட்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரஷ்யா, ரோமானிய கால ஜூலியன் கேலண்டரின்படி ஜனவரி 7 அன்றுதான் கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்தது, இதன்படியே உக்ரைனும் கொண்டாடியது.

ஆனால் கடந்தாண்டு யூலை மாதம் ரஷ்யாவை எதிர்க்கும் விதமாக  இனி பின்பற்ற மாட்டோம் என, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சட்டத்தை மாற்றினார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கத்தை மாற்றி, முதன் முறையாக டிசம்பர் 25 ஆம் திகதி கொண்டாடியுள்ளனர்.

மேலும் போரினால் அதிகம் சேதமடையாத மேற்கு நகரமான லிவிவ் நகரில், பாரம்பரிய உடையில் குழந்தைகள் கரோல் பாடல்களைப் பாடி தெருக்களில் திருவிழா ஊர்வலங்களில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....