tamilni 424 scaled
இலங்கைசெய்திகள்

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Share

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு

நத்தார் தின சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலி பூஜைகள் நடத்தப்படும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (23.12.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பிற்காக 7500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, கிறிஸ்மஸ் தினத்தன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் எனவும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் மதுபானக் கடைகளை திறக்க முடியும் எனவும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
23 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தென் கடலில் பெரும் போதைப்பொருள் வேட்டை: 250 கிலோ கொக்கைனுடன் 6 பேர் கைது!

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தென் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

22 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடற்றொழில் அதிகாரிகளுக்கு இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்கள்: இந்திய அரசு நிதியுதவி!

இலங்கை கடற்றொழில் துறையில் களப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு இலத்திரனியல்...

21 14
உலகம்செய்திகள்

ஈரான் தாக்குதலால் ட்ரம்ப் அதிர்ச்சி: முன்கூட்டியே எச்சரித்த உளவுத்துறை – வளைகுடாவில் பதற்றம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தி வரும் சரமாரி பதிலடித் தாக்குதல்கள் தமக்கு “ஆச்சரியம்” அளிப்பதாக...

20 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் மாவட்ட விவசாயி மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட பொறிமுறை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள...