tamilni 422 scaled
இலங்கைசெய்திகள்

இளம் தாய் ஒருவரின் கொடூர செயல்

Share

இளம் தாய் ஒருவரின் கொடூர செயல்

அனுராதபுரம், தம்புத்தேகம தேக்கவத்தை பகுதியில் சிசுவை புதைத்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த இவர், காலதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குழந்தை உருவாகி 6 மாதமாக இருக்கும் போது கருவை கலைப்பதற்காக சில மாத்திரைகளை உட்கொண்டதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​சிசு புதைக்கப்பட்ட இடத்தை தம்புத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களை ஜனவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...