tamilni 421 scaled
இலங்கைசெய்திகள்

குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை

JN1 எனப்படும் கோவிட் மாறுபாடுடன் குழந்தைகளிடையே தற்போது பல சுவாச நோய்கள் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே ஆரோக்கியமான பழக்கங்களை மீண்டும் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

JN1 வகை கோவிட் மாறுபாடு இலங்கைக்கும் வரக்கூடும் என்றும், இந்த நாட்களில் இருமல் அல்லது சளி இருந்தால், முகக்கவசங்களை அணியுமாறும் தெரிவித்துள்ளார்.

“இதேவேளை, இன்ஃப்ளூவன்ஸா நோயும் பரவிவரும் நிலையில், புதிய கோவிட் வழக்குகள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

பண்டிகை காலம் என்பதனால்,பயணம் செய்யும் போது அனைவரும் கவனமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளார்.

மேலும், குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை கோவிட் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை எனவும், டெங்கு நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வயிற்றுப்போக்கு என்பது விடுமுறை நாட்களில் தினமும் காணப்படும் ஒரு நோய் எனவும், குழந்தைகளுக்கு சுத்தமான உணவு வகைகளை கொடுக்குமாறும் தீபால் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...