tamilni 413 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் தனுஷ்க குணதிலக்க

Share

இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் தனுஷ்க குணதிலக்க

பெண்கள் மீதான அத்துமீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க, 14 மாதங்களுக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் பங்கேற்றுள்ளார்.

அவருக்கு விதிக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் தடை நீக்கப்பட்டதன் மூலம் இந்த வருடத்திற்கான கழகங்களுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நுகேகொட விளையாட்டுக் கழகத்துடன் SSC விளையாட்டுக் கழகம் சார்பில் தனுஷ்க குணதில்ல மீண்டும் களமிறங்கினார்.

இந்நிலையில் மழை காரணமாக குறித்த போட்டி 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய SSC விளையாட்டுக் கழகம் 41. 5 ஓவர்களில் 152 ஓட்டங்களைப் பெற்றது.

153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நுகேகொடை விளையாட்டுக் கழகம், வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்படபோது, 37 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...