tamilni 409 scaled
இலங்கைசெய்திகள்

இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

Share

இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

ட்ரோன் தாக்குதல் மூலம் இந்தியப் பெருங்கடலில் இன்று (23.12.2023) வணிகக் கப்பலொன்று சேதமடைந்துள்ளது.

குஜராத் கடற்கரையில் இடம்பெற்றுள்ள இந்த உரிமை கோரப்படாத தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே கூறியுள்ளது.

மேலும் இந்த கப்பல் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என இரண்டு கடல்சார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கப்பலில் சில கட்டமைப்பு சேதங்கள் பதிவாகியுள்ளதோடு முன்னதாக இந்த கப்பல் சவூதி அரேபியாவுக்கு சென்ற நிலையில் இந்திய துறைமுகத்திற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பில் இந்திய கடற்படை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...