tamilnid 10 scaled
இலங்கைசெய்திகள்

உறக்கத்திலேயே மர்மமாக உயிரிழந்த இளைஞன்

Share

உறக்கத்திலேயே மர்மமாக உயிரிழந்த இளைஞன்

புத்தளத்தில் இளைஞர் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ பங்கதெனிய வெஹரக்கல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய ஹசித் சந்தருவன் பெரேரா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி காலையில் உயிரிழந்தவரின் பெற்றோர் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் காலை 7.30 மணியளவில் சகோதரன் ஒருவர் அறைக்கு சென்று பார்த்த போது, அவர் எழுந்திருக்கவில்லை எனவும் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கையடக்க தொலைபேசியில் பொருத்திய ஹியர் போன்களை காதில் அணிந்த நிலையில் உறங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், அயலவர்களின் உதவியுடன் குறித்த இளைஞனை சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவரின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...