tamilni 344 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் சமூகத்தினர் அனைவரும் கடும்போக்குவாதிகள் அல்ல

Share

புலம்பெயர் சமூகத்தினர் அனைவரும் கடும்போக்குவாதிகள் அல்ல

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைவரும் கடும்போக்குவாதிகளோ அல்லது நாட்டுக்கு எதிரானவர்களோ அல்ல என தேசிய பாதுகாப்பு குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர் சமூகத்தினை நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

புலம்பெயர் மக்களை முதலீடு செய்ய ஊக்குவிப்பதுடன் அவர்களுக்கு நலன்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையை ஈர்ப்பு மிக்க ஓர் இடமாக மாற்ற வேண்டுமாயின் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

புலம்பெயர்ந்த அனைவரையும் இனவாதிகள் என்ற அடிப்படையில் பார்க்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...